கல்வாரியின் அன்பிதுவே

 

 

     கல்வாரியின் அன்பிதுவே

                உம்மை நான் மறப்பேனோ!

                                என்முழு ஆத்துமா பலம் சிந்தையோடு

                                நான் உம்மை தான் ஆராதிப்பேன்

 

 

கல்லான எந்தன் உள்ளம் உடைய

கல்வாரி அன்பின் தியாகத்தில்; கரைய

உம்மையே நேசிப்பேன் உம்மையே தொழுவேன்

               

மூன்றினில் ஒன்றாய் ஜொலிப்பவர் நீரே

மூன்றாம் நாளில் உயிர்த்தவர் நீரே

உம்மையே துதிப்பேன் உம்மையே நோக்குவேன்

               

 

சாரோனின் ரோஜா என் லீலி புஷ்பம்

சாவையும் வென்ற சர்வமும் நீரே

உம்மையே சேவிப்பேன் உமக்காய் ஜீவிப்பேன்