கல்வாரியின்
அன்பிதுவே
கல்வாரியின் அன்பிதுவே
உம்மை நான் மறப்பேனோ!
என்முழு ஆத்துமா பலம் சிந்தையோடு
நான் உம்மை தான் ஆராதிப்பேன்
கல்லான எந்தன் உள்ளம் உடைய
கல்வாரி அன்பின் தியாகத்தில்; கரைய
உம்மையே நேசிப்பேன் உம்மையே தொழுவேன்
மூன்றினில் ஒன்றாய் ஜொலிப்பவர் நீரே
மூன்றாம் நாளில் உயிர்த்தவர் நீரே
உம்மையே துதிப்பேன் உம்மையே நோக்குவேன்
சாரோனின் ரோஜா என் லீலி புஷ்பம்
சாவையும் வென்ற சர்வமும் நீரே
உம்மையே சேவிப்பேன் உமக்காய் ஜீவிப்பேன்